Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Tuesday, September 25, 2007

விஜயகாந்த்

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த். கட்சியைப் பதிவு செய்யும் விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கே சிரிப்பு மூட்டியவர் ஆவர். "கட்சியில் ஆட்களை சேர்ப்பது என்றாலும் நீக்குவது என்றாலும் தலைவரின் முடிவு தான். கட்சியில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தலைவர்தான் எடுப்பார்'' என்று சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு போய் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்கள் தே.மு.தி.க.வினர். அரண்டு போய்விட்டார்கள் தேர்தல் ஆணையர்கள். ஜனநாயக நாட்டில் இப்படியொரு சட்டதிட்டத்துடன் கட்சியா என நொம்பலச் சிரிப்புடன் தே.மு.தி.க.வின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் தன் கட்சியில் பழைய பலாப் பழமான பண்ருட்டி ராமச்சந்திரனை அவைத்தலைவராக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அப்புறம் பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் எல்லோரையும் நியமித்திருக்கிறார். அத்தனை பேரையும் வைத்துக்கொண்டு, நான்தான் முடிவெடுப்பேன் என்று சட்டதிட்டம் வகுத்தால், அவர்களெல்லாம் எதற்கு என்ற கேள்வியை சாதாரணத் தொண்டன்கூட கேட்பான். மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களையும் 40 எம்.பி.க்களையும் மேடைக்கு மேடை கேள்வி கேட்டுச் சிரிப்பு மூட்டும் விஜயகாந்த்துக்கு, தன்னுடைய கட்சியின் சட்ட திட்டம் பற்றித் தேர்தல் ஆணையம் கேள்வி கேட்குமே என்ற அரசியல் அடிப்படை தெரியாமல் போய்விட்டது.

பாவம் விஜயகாந்த். மறுபடியும் சட்ட திட்டம் வகுத்துத் தன் கட்சியை பதிவு செய்ய வேண்டியதாயிற்று.

விஜயகாந்தின் மதச்சார்பின்மையும், தமிழ்பற்றும்!!

இதுநாள்வரை தாம் அல்லாவுக்காக குல்லா போடுபவர் என்றும் இஸ்லாமியர்கள் எனது ஒன்றுவிட்ட தம்பிகள் என்று சமத்துவம் சமதர்மம் பேசிய விஜய காந்து "இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்". ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று திருவாய் மலர்ந்துள்ளார். தேமுதிக என்ற தேர முடியாத திக்குமுக்கு கழக தொடக்கவிழாவில் பட்டை ( அந்த பட்டை அல்ல) நெற்றியில் அடித்துவந்து தம் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி தாம் தமிழர்களுக்காக பாடுபடப்போவதாகவும், மதசார்பற்றவர் என்றும் சொன்னார். "பட்டை" வெளிப்படையாக தெரிந்ததும் பாஜக அவரையே சுற்றி சுற்றி வந்து கூட்டணி அமைத்து சட்டமன்றத்தில் நுழைய முயற்சித்தது. விஜயகாந்தும் தமது இந்துத்துவ வேசம் வெளிப்பட்டுவிட்டால் (போட்ட) முதலும் மோசமாகி முற்றிலும் மோசமாகிவிடும் என்று தவிர்த்தார்.

எந்த கட்சியும் சரியில்லை என்று கருதிய சிலர் வேறுவழியின்றி மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதற்காக விஜயகாந்துக்கு ஓட்டுபோட்டனர், 60 விழுக்காடு பதிவான வாக்குகளில் 8% விழுக்காடு இவருக்கு கிடைத்தது. 234 தொகுதிகளில் நின்று இந்த வாக்கை பெற்றவர் வெறும் 25 தொகுதிகளில் நின்று காங்கிரசை இவருக்கு கிடைத்த 8% ஓட்டை வைத்து ஓட்டை கணக்கு போட்டு தாம் காங்கிரசை விட பெரிய கட்சி என்று சொல்லி வந்தார். அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது. விஜயகாந்துக்கு செல்வாக்கு இருப்பதாக அவரே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். மதுரை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்ததற்கு விஜயகாந்தின் ஊர் என்பதாலும், அவருடைய உறவினர்கள் என தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், ஜெயலலிதா எதிர்கட்சியாகிவிட்டதால் நம்பிக்கை இழந்ததால் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, இதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்கவே முடியாது.

இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று சொல்லி இருப்பதனால் முஸ்லிம்களின் சகோதரன் என்று சொல்லி வந்த விஜயகாந்து இதன் வழி முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் கருணாநிதி திட்டவில்லையே ஆதங்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. இவருடைய மறைமுக இந்துத்துவ முகமூடி கிழிந்து தொங்குகிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற "தமிழ் பழமொழியை" பின்வரும் தேர்தல்களில் விஜயகாந்து தெரிந்து கொள்வார்.

திருவள்ளூவர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்டு தனது மேதாவித்தனத்தை தனது விசிலடிச்சான் கும்பலுக்கு காட்டி சிந்திக்க வைத்திருக்கும் புரட்சிக்கலைர்க்கு மேலும் ஒரு யோசனை ,கேள்வி கேட்பதற்கு பாரதியார் ,பாரதிதாசன் எந்த கல்லூரியில் படித்தார்கள்? அவர்கள் பெயரில் எதற்கு பல்கலைகழகங்கள்?.