Yahoo Chat ! MSN Google Talk போன்ற அனைத்தையும் ஒரே பார்வையில் அரட்டையடிப்பதற்கான இணையதளம மற்றயது கோப்புக்களைப்பதிவேற்றி வைத்திருக்கும் இணையத்தளம்
இதோ அத்தளத்திற்கான முகவரி https://imo.im/
*AIM , Yahoo ! , MSN , Google Talk அனைத்தையும் ஒரேபார்வையில்
*வேகம் அதிகம்
Sunday, September 30, 2007
Yahoo Chat ! MSN Google Talk
Posted by
சசி
at
5:41 AM
0
comments
Labels: Chat
செவ்வாயும் விண்கலமும்
செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய விண்கலம் எப்படி செவ்வாய் கிரகத்தில் இறங்கியது என பார்க்க இங்கே அழுத்துங்கள்
Posted by
சசி
at
1:17 AM
0
comments
Saturday, September 29, 2007
இலவச தமிழ் மென்நூல்கள்
மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்-அகர வரிசைப் பட்டியல்
http://www.tamil.net/projectmadurai
தமிழ் நூலகம் தமிழ் மென்நூல்கள்
http://www.chennailibrary.com/ebooks
நூலகம் திட்டம்இந்நூலகம் திட்டத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களே வெளியிடப்படுகின்றன.
http://www.noolaham.net
தமிழ் கதைகள்
http://www.maraththadi.com
Posted by
சசி
at
1:10 PM
0
comments
Labels: இலவச இ-புத்தகங்கள்.
Free Download Manager
Free Download Manager- இது அந்த மென்பொருளின் தலைப்பு. இதை இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம். இது Share Ware கிடையாது. முற்றுலும் இலவசமாகவே வழங்குகிறார்கள்.
மிக வேகம், தகவல் இழப்பின்மை, குறைந்த இணைய வெகத்தில் கூட விரைவில் பதிவிறக்கம் செய்தல் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
பதிவிக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
Posted by
சசி
at
12:57 PM
0
comments
கீழ்க்கண்ட கலைசார் கோப்புகளை டவுன்லோடு செய்து மகிழலாம்.
வான் கோகின் 30 ஓவியங்கள் - பவர்பாயின்ட் ஷோ. ‘ஸ்டாரி, ஸ்டாரி நைட்’ என்ற பாடலும் கூடவே ஒலிக்கும். நான் ஸ்பீக்கரை அணைத்துவிட்டுத்தான் இதைப் பார்ப்பது வழக்கம்.
ஹாலந்தில் இருக்கும் வான் கோக் அருங்காட்சியகத்தின் கேட்டலாக், ஆங்கிலத்தில் - 24 பக்க பி.டி.எஃப். கோப்பு. அழகான படங்கள், பயனுள்ள தகவல்கள்.
The Unknown Monet - இந்தப் பெயரில் நடந்த ஒரு கண்காட்சி, 19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு ஓவிய மேதையான க்ளோத் மோனேயின் (Claude Monet) அவ்வளவாக வெளியே தெரியாத அற்புதப் படைப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்த பி.டி.எஃப். கோப்பில் அந்தப் படைப்புகள், அவருடைய வாழ்க்கை வரலாறு எல்லாம் இருக்கின்றன. குட்டி விருந்து.
Cézanne in Provence - க்ளோத் மோனேயின் சகாவான போல் செசான் (Paul Cézanne) நவீன ஓவியக் கலையின் தந்தை என்று சொல்லப்படும் அளவுக்குப் பெரிய ஆள், மேதை. அவர் தன் சொந்த ஊரில் வரைந்த அதிமுக்கியமான படைப்புகள், வாழ்க்கை வரலாறு ஆகியவை இந்தக் கோப்பில் இருக்கின்றன. முக்கியமான ஃபைல்.
Monet’s Seascapes - மோனேயின் அற்புதச் சித்தரிப்பில் கடல் மற்றும் கடல் சார்ந்த காட்சிகள். இவற்றைப் பார்ப்பது நம்ப முடியாத ஓர் அனுபவம்.
மார்க் ஷகாலின் 19 ஓவியங்கள். பவர்பாயின்ட் கோப்பு. ஸ்பீக்கரை அணைத்துவிட்டுப் பார்த்தால் மேலும் நல்ல அனுபவமாக இருக்கும்.
Posted by
சசி
at
12:44 PM
0
comments
தெற்கு ரயில்வேயின் புதிய இணையதளம்
Posted by
சசி
at
9:25 AM
0
comments
Labels: ரயில்வே
Friday, September 28, 2007
கவிதைகள்

http://gkpstar.googlepages.com/arivumadhi.pdf
Natpukkalam-Arivumadi.pdf -நட்புக் காலம்
Vali.pdf-வலி
தபூ சங்கர்
Vizhi_Eerpu_Visai_1_.pdf -விழி ஈர்ப்பு விசை
DhevadhaigalinDhevadhai1.pdf -தேவதைகளின் தேவதை
karuppupetti.html-கருப்பு பெட்டி

நா.முத்துக்குமார் கவிதைகள்
namuthukumarvijay.pdf
na.muthukumaar.html
யுக பாரதி கவிதைகள்
yuga1.html
ஜெயகாந்தன் கதைகள்
jeyakant1.pdf
jeyakant2.pdf

வைரமுத்துக் கவிதைகள்
Thanneer_Desam.pdf
Vairamuthu_NilaRaseegan.pdf
vairamithu2.html
vairamuthu.html
vairamuthunew.html
பொதுவானவை
kavicollection2.html
kavicollection4.html
kavicollection3.html
kavicollection2.html
kavicollection5.html
kavidhai.pdf
ebook.pdf
vikatankavidaigal.pdf

cinema.pdf
Theruvaasagam.pdf
kavidhiagal.pdf
கலாப்ரியா கவிதைகள்
kalapriya1.html
மகுடேஷ்வரன் கவிதைகள்
magudeswaran.pdf
உமா மகேஸ்வரி கவிதைகள்
UmaMaheswariPoems.pdf
விகடன்
MuthiraiKavithaigal.pdf -விகடன் முத்திரை கவிதைகள்
தனி கதைகள்
கோணல் பக்கங்கள் -KonalPages2.pdf
மே தினம் MayDay.pdf
அங்கே எப்ப என்ன நேரம் -AngeIppaEnnaNeram.pdf
அந்நியர்கள் உள்ளே வரலாம் -AnniyarkaLuLLeeVaralaam.pdf
muthaiya lingam kadhaigal-AMuthulingamKathaigaL.pdf
கவிதை
Iravil_salanamatru_karaium_manitharg.pdf
சுபா கவிதை
kaaththirukkiReen.PDF-காத்திருக்கிறேன்
Posted by
சசி
at
11:59 AM
1 comments
Labels: கவிதைகள்
PDF க்கு மாத்தனுமா?
பதிவிறக்க
இதை இன்ஸ்டால் செய்தால் ஒரு பிரிண்டர் ரைவரை அது இன்ஸடால் பண்ணும் பின்பு நீங்கள செய்ய வேண்டியதெல்லாம..
நீங்கள் பிடிஎப் செய்ய தெவையான கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
பின்பு ஃபைல் மெனுவல் பிரிண்ட் என்பதை தெரிவு செய்யுங்கள்
பிரிண்டராக PDF creator என்பதை தெரிவு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள்
இப்போது வரும் விண்டோவில் சேவ் என்பதை தேர்வு செய்து தேவையான இடத்தில் சேமியுங்கள்
அப்புறம் என்ன பிடிஎஃப் ஃபைல் ரெடி!!!!
Posted by
சசி
at
11:23 AM
0
comments
கல்கியின் இ-புத்தகங்கள் இலவசமாக
தமிழில் இ புத்தகங்களைக் காண்பது மிகவும் அரிதான விடையம். அண்மையில் கல்கியின் படைப்புகளை என் நண்பனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.........தமிழில் பல இ புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கலாம். கல்கியின் படைப்புகளை பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். (You need win rar & Acrobat Reader)
உள்ளடக்கப்பட்டுள்ள புத்தகங்கள்
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்தீபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. சோலைமலை இளவரசி
பதிவிறக்குக
மேலும் பல புத்தகங்களைப் பதிவிறக்க செல்க மதுரைத் திட்டம்.....
Posted by
சசி
at
11:03 AM
0
comments
Labels: இலவச இ-புத்தகங்கள்.
உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்.
உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள். வழக்கம் போல அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளது இரண்டாம் மூண்றாம் இடங்களில் முறையே கேம்பிரிச், ஒக்ஸ்போட் உள்ளன. இதைவிட மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்களும் முதல் 200 இடத்தினுள் உள்ளன.
Posted by
சசி
at
10:55 AM
0
comments
கார்டூன்கள்
பதிவிறக்கிச் சிரித்து மகிழ
Posted by
சசி
at
10:47 AM
0
comments
Labels: கார்டூன்கள்
புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இலவசம்.
ஆங்கில இலக்கியம் படிப்பதில் ஆர்வமுடைய நண்பர்களுக்காக இத்தகவல். ஷேக்ஸ்பியரின் மெக்பத், எச்.ஜி.வெல்ஸின் - இன்விஸிபில் மேன் என ஆங்கில இலக்கிய நூல்கள் ஆயிரக்கணக்கானவற்றை நாம் இலவசமாக இறக்கிக் கொள்ளமுடியும்.
விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மின்னிலக்க நூலகம் இவற்றை வழங்குகிறது. ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் பெரும்பாலான புத்தகங்களின் அளவு 300 KB ஐவிட குறைவுதான். ஆம்!. ஷேக்ஸ்பியரின் - ஜூலியஸ் சீஸர் முழு நாடகமும் 250 KB ஐவிட குறைவுதான். இங்கு அனைத்து மின்னூல்களும் மைக்ரோசாப்ட் ரீடர் கோப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயரைக்கொண்டோ அல்லது புத்தகத்தின் பெயரைக் கொண்டோ இந்த நூலகத்தில் தேடி நமக்குத் தேவையானவற்றைக் கண்டுபிடிக்கலாம். MS Reader இல்லையென்றால் மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் நமக்காகப் புத்தகங்களை வாசிக்கவும் செய்யவும். அஷ்டாவதானி, தசாவதானிபோல ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டு அதே நேரத்தில் இன்னொரு புத்தகத்தை நாமாக வாசிக்கவும்கூடச் செய்யலாம் . புத்தகத்தின் வாசிப்பைக் கேட்க உங்கள் கணினியில் ஏதாவது ஒரு பேசுபொறி(Speech engine ) நிறுவப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அதையும் இணையத்திலிருந்து இறக்கி நிறுவிக்கொள்ளவும்
Posted by
சசி
at
6:28 AM
0
comments
Labels: இலவச இ-புத்தகங்கள்.
இலவச ஈபுத்தகம் -2
இலவச ஈபுத்தகங்களில் குவியலை இத்தளத்தில் காணலாம்.
இன்றைய அளவில் ஏறக்குறைய 16,502 புத்தகங்கள் உங்களுக்காக இலவசமாக உள்ளன.
http://manybooks.net
Posted by
சசி
at
6:22 AM
0
comments
Labels: இலவச இ-புத்தகங்கள்.
இலவச இ-புத்தகங்கள்.
கணிணி மற்றும் தகவல் தொழில் நுட்பம் இன்னும் பிற இ-புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில்.Computer and Information Technology and more ebooks for free.
http://rahmat.zikri.com/books.html
http://www.maththinking.com/boat/booksIndex.html
http://gayanb.com/http://www.xpressionsz.com/
http://lab.lpicn.org/pub/books/
http://docs.online.bg/
http://support.apress.com/code_listing.asp?s=0&view=all
http://etext.lib.virginia.edu/ebooks/
http://stommel.tamu.edu/~baum/programming.html
http://www.comms.scitech.susx.ac.uk/fft/
http://www.mslit.com/default.asp?mjr=FRE
http://www.e-book.com.au/freebooks.htm#1
http://onlinebooks.library.upenn.edu/lists.html
Posted by
சசி
at
5:41 AM
0
comments
Labels: இலவச இ-புத்தகங்கள்.
Thursday, September 27, 2007
1GB இலவச இணையம்
IGB இடக்கொள்ளவு
100GB பான்ட்வித்
மற்றும் அனைத்தும் வரையறையின்றி(PHP,MySQL,more..)
மின்னஞ்சல் வசதிஉங்கள் தளத்தில் விளம்பரம் கிடையாது
http://www.freehostingz.com/
எனும் தளம்இவ்வசதிகளை சிறப்பு சலுகையாக அறிவித்திருக்கிறது
எச்சரிக்கை ;- இந்த தளங்கள் எவ்வளவு நம்பக தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூற முடியாது சில நேரங்களில் உங்கள் தகவல்களோடு காணமலும் போய் விடக்கூடும் ஆகவே முன் ஜாக்கிரதை தேவை"
ஆனாலும் கட்டணம் கட்டி இணையத்தளத்தை பெறுவதற்க்கு முதல் இவை போன்றவற்றில் பழகி பின் கட்டணத்திற்கு தாவலாம்
Posted by
சசி
at
12:01 PM
0
comments
இணைபக்கங்கள் வடிவமைக்க உதவும் தளங்கள்
இணையத்தில் பலர் சொந்தமாக தளம் அமைக்க நினைக்கும் வேளையில் அவர்களுக்கு வடிவமைப்பு அறிவின்மையால் அத்திட்டத்தை கைவிடுகின்றனர் சில தளங்கள் இலகுவாக அமைக்க சில கருவிகளை தருகின்றன பயன்படுத்தி பாருங்கள்
Wufoo- online வைத்து CSS and XHTMLஆகியவற்றினை வடிவமைக்க உதவும்
freewebs -சாதாரணவகை பக்கங்களை இலகுவாக அமைக்க உதவும்
weebox -பிளாஸ் வகை பக்கங்களை வடிவமைக்க உதவும்
Weebly -எந்தவகையான பக்கங்களையும் வடிவமைக்க உதவும்
sampa -சாதரணவகை வடிவமைப்பு
Posted by
சசி
at
11:58 AM
0
comments
இணையம் அமைக்க இலவச இடம்
இடக்கொள்ளவு -5Gb
bandwidth -15Gb
விளம்பரங்கள் இல்லை
mysql databases -5full phpmy admin support
ftp accesss
Subdomain (yourname.iifree.net)
உங்கள் டெமைனையும் பாவிக்கலாம்
http://www.iifree.net/
Posted by
சசி
at
11:51 AM
0
comments
பகத்சிங் நூற்றாண்டுவிழா
முதல்வர் கலைஞர் அவர்கள் விழாப் பேருரை ஆற்றுகிறார்.
செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை ஏற்கிறார்.
இவ்விழாவில் எம்.கிருஷ்ணசாமி, கோ.க.மணி, என். வரதராஜன், தா.பாண்டியன், கே.எம். காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர் பெருமக்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
Posted by
சசி
at
11:35 AM
0
comments
Labels: மாவீரன் பகத்சிங்
கவிதை
நீல நிறம் கொண்ட வானம் எனும் நெற்றியிலெ
கண்களை மறைத்துக்கொண்டு நீலா எனும் திருநீரிலெ
வெளிச்சம் என்ற வெள்ளியை பூமியிலெ பதிக்கிறாய்
இதைக்கொண்டு இரவு எனும் கரியை கீழ்த்துவிட்டு ஒளியை கொண்டு வருகிறாய்
மெல்லிய பூங்காற்ரை என் மெனியில் தழுவ செய்து,
என் மனம்யெனும் பூந்தொட்டத்தில் அமைதியெனும் விதையை விதைக்கிறாய்
என் மனதினில் இன்பங்களை உருவாக்கி புது கவிதைகள் எழுத செய்கிறாய்
- சுந்தர்.ம
Posted by
சசி
at
12:11 AM
1 comments
Labels: கவிதைகள்
Wednesday, September 26, 2007
1ஆம் வகுப்பு முதல் + 2 வரை பாடநூல்களை இணைய தளத்தில்
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.
அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."
இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Posted by
சசி
at
9:14 PM
0
comments
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் திறப்புவிழா
செப்டம்பர் 29-09-2007 ஆம் தேதி, நமது வாழ்விலோர் திருநாள்! அறிவு ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் பெயரில் அகிலத்திற்கும் அவர்தம் கொள்கை, கோட்பாடுகளை, கல்வியின் மூலமாகப் பரப்பிட பெருமைமிகு பல்கலைக் கழகம் தஞ்சை வல்லத்தில், ``பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம் என்ற பெயரில், தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் மானமிகு, மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவிருக்கிறது.கல்வியின்மூலம் தந்தை பெரியார் விரும்பிய `இனிவரும் உலகம் என்பதை `வந்த உலகமாக ஆக்குவதற்குக் கால்கோள் விழா அவ் விழாவாகும்!
இது தனிப்பட்ட எவருடைய பல்கலைக் கழகமும் அல்ல; மக்களால், மக்களுக்காக நடத்தப் பெறும் மக்கள் பல்கலைக் கழகமாகும்!சமூகப் புரட்சி சரித்திரத்தின் புதியதோர் பொன்னேட்டை இணைக்கும் புத்தாக்கமாகும்.அதனால்தான் இதன் இலச்சினையிலேயே``புது சிந்தனை - புத்தாக்கம் - புது உலகு என்று அமைக்கப் பட்டுள்ளது.திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளில் இதுவும் குறிப்பிடத் தகுந்ததே!காலம் தந்த கருத்துக் கொடையாம் உழைப்பின் உருவம் கலைஞர் தந்த முப்பெரும் பரிசுகள் பெரியார் கொள்கையாளர்களுக்கு இவ்வாண்டு.
1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் - பயிற்சி - செயல் திட்டம்
2. பெரியார் திரைப்பட வெற்றி உலா!
3. பெரியார் - மணியம்மை பல்கலைக் கழகம்!
இந்நாள் கழகக் குடும்பத்தவர்களின் சங்கமத் திருநாளாக இருக்கவேண்டாமா? எனவே, வாருங்கள் தோழர்களே, தோழியர் களே! தஞ்சைக்கு வாருங்கள்!தரணி முழுவதும் பெரியார் பரணி பாடிட, முகிழ்த்திடும் பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள், வாருங்கள்!வாழ்த்துகளைக் கூறிட வந்து சேருங்கள் என்று இருகரம் கூப்பி, உங்களில் ஒருவன் அழைக்கிறேன்!காலை 9 மணிக்கு முன்னதாக மன்றத்தில் அமருங்கள்!அன்பாடு வரவேற்கக் காத்திருக்கும்,
உங்கள்
தொண்டன், தோழன்,
கி. வீரமணி
மேலும் விபரங்களுக்கு விடுதலை நாளிதழ் இங்கே
Posted by
சசி
at
8:49 PM
0
comments
புத்தர்
என்னதான் செய்வது? எங்கிருந்து தொடங்குவது? யாரை, யார் எதிலிருந்து எவ்வாறு விடுதலை செய்வது? அச்சத்தினின்றும், அறியாமையினின்றும் விடுதலை பெற வேண்டியதுதான் - மானுட விடுதலையின் தற்படியாக அமையப் பெறுகிறது. அச்சமென்பது பசி, தாகம், உடலின்பம் போன்ற இயற்கை உணர்ச்சியன்று. இயற்கையின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள இயலாத போது, இந்தச் செயற்கை உணர்ச்சியான அச்சம், வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், மனித இன எதிரிகளால் நன்றாக உரமூட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.
சமூகத்தில் நங்கூரம் போல் இறுகிக் கட்டப்பட்டிருக்கும் அச்ச உணர்ச்சி, ஆதிக்க வர்க்கம் புரியும் திசை திருப்பலின் விளைவால் ஏற்பட்டதாகும். அநீதியை எதிர்க்காமல் பின்வாங்குதல் என்பது, அச்ச உணர்ச்சியால் ஏற்படும் கொடுமையான நோய். அச்சம் என்பது, மனிதர்கள் மீது செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கப்படும் பண்பாகும்.
ஆனால், மனிதர்களது வீரம், குஞ்சுகளைக் கொத்த வரும் பருந்துகளை எதிர்க்கும் தாய்க் கோழி போல இயற்கையானது. மனிதருக்குள் அச்சம் வீரம் இணைந்தே இருக்கின்றன. வரலாற்றில் மனித வீரம் நேரிய சாதனைகளையே செய்திருக்கிறது. எனவேதான் வரலாற்று வளர்ச்சிகளின் முழுப்பயனையும் நுகர்வோர், தங்கள் வாழ்வு நலன்களைக் கட்டிக் காக்க மனிதருள் அச்சத்தைப் புதைக்கின்றனர். அச்சத்திற்குக் கட்டுப்பட்ட பிறகு, மனிதர்களது அகமும் முகமும் சிதைக்கப்படுகின்றன. மனித இன வரலாற்றில் சுயநல ஆசையிலிருந்து மட்டுமல்ல, அச்சத்திலிருந்து வெளிவரவும் முதன் முதலில் வழிவகுத்தவர் புத்தர் ஆவார்.
மலையை அல்லது பெரும் பாறாங்கல்லை உடைப்பதற்கு ஏதேனும் ஓரிடத்தில் உளியையோ, வெடியையோ வைக்க வேண்டியிருக்கிறது. எந்த இடத்தில் வெடி வைத்தால் உடைப்பதற்கு எளிதாக - பரவலாக வெடிப்புகள் விழும் என்பதைத் தெரிந்து வைக்க வேண்டும். மானுடத்தின் எதிர்மறைகளுக்கு எதிராக இந்த வியூகத்தை முதன் முதலில் கற்றுக் கொடுத்தவர் புத்தரே ஆவார். எங்கெல்லாம் மனிதர்கள் தம் ஆராய்ச்சி அறிவை இழந்து விடுகின்றனரோ, அங்கெல்லாம் ஆதிக்கத்தை வழிபடும் உணர்ச்சி இயல்பாகத் தோன்றி விடுகிறது. மனிதனின் சுயநல உணர்ச்சியும், பாதுகாப்பு உணர்ச்சியுமே வழிபாட்டு மனநோய்க்கு அரண்களாகி விடுகின்றன. மனிதர்கள் இந்த நோயிலிருந்து மீள முடியுமா? உறுதியாக மீள முடியுமென்று, மீட்சிக்கான வழியாக இருந்து, மானுடத்தை வழி நடத்தியவர் தான் புத்தர்.
புத்தர் மீட்சிக்கான வழியை, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடையிலிருந்து தொடங்கினார். எப்படியும் சாகப் போகிறோம். எனவே, சமூக பயங்கரவாதங்களோடு மோதிவிட்டுச் சாவோம் என்ற கடமையை நோக்கி வாழ்க்கையைத் தொடங்க கற்றுக் கொடுத்தவர் புத்தர். அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கையை நோக்கி வாழப் புறப்பட்டவர்கள் தான் - அச்சத்தின் நோயிலிருந்தும் வழிபாட்டின் மனநோயிலிருந்தும் மீள முடியும்; மற்றவர்கள் மீளுவதற்கும் துணைபுரிய முடியும்.
இத்துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, சமூக பயங்கரத்தையும், வழிபாட்டு உணர்ச்சி என்ற மனித இயல் குறைபாட்டையும் - பல நிலைகளில் கெட்டிப்படுத்தியது பார்ப்பன வேத (இந்து) மதமே ஆகும். இந்த பார்ப்பன - பார்ப்பனியக் கருத்தியலை அதன் மூலத்திலேயே முற்றுகையிட்டு, மக்களின் மனத்தில் கனறும் அச்சாம்பலால் மூடப்பட்டிருந்த வீரத்தை வெளியே கொண்டு வந்த முன்னோடி புத்தரே ஆவார். இயற்கையை உள்ளது உள்ளவாறே புரிந்து கொள்ள வேண்டும். அதைக் கயமை மனதோடு கூடிய கற்பனைத்திறன் கொண்டு முரண்பாடான அர்த்தத்தைக் கற்பித்து, அதற்குள் மக்களைச் சிக்க வைத்து மண்டியிடச் செய்யக் கூடாது என்றார் புத்தர். ஒரு தலைமுறையினரின் தவறான நம்பிக்கை, இனம் புரியாத அச்சம், ஒன்றிக் கொண்டிருக்கும் அறியாமை, பல தலைமுறைகளுக்கும் தொடரும். அதனால் பல தலைமுறை தொடர்ந்து கெடும் என்று எச்சரித்தார் புத்தர்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ - நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ - தாய் - தந்தையர், ஆசிரியர் சொல்லியது பற்றி நடந்தது என்பதற்காகவோ - எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற புத்தர், நம்டைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி என்றார்.
மனிதர்கள் உண்மையையும், மெய்யான உண்மையையும் அறிய வேண்டும். அவர்களுக்குச் சுதந்திரம் மிக மிக அவசியமானதாகும். உண்மையைக் கண்டறிய ஒரே வழி கருத்துச் சுதந்திரமே என்றார் புத்தர். மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து விழுகின்றனவா இல்லை, மூளையில் இயல்பாக உள்ளனவா? அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன என்றார். மனிதர்களை அவர்களின் மனம் எத்தன்மை உடையதாய் ஆக்குகிறதோ அப்படியே அவர்களாவார்கள்.
மனதின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படிக்கட்டு என்றார் புத்தர். மனிதன் சிந்தனை, அவனியிலிருந்து புறப்பட்டு, கடவுள்களின் உலகத்தை நோக்கி திருப்பப்படுவதை புத்தர் தடை செய்தார். மனிதர்களின் தேடலை உள்நோக்கி வழிநடத்தி, அவர்களுக்குள்ளேயே ஆற்றலை உணரச் செய்தார்.
உலகின் எல்லா மதங்களும் அதனதன் வர்க்க நலன்களுக்கேற்ற வகையில் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. ஆனால், ஒழுக்கம் அவைகளின் அடிப்படையல்ல. ஒழுக்கமென்பது, மதம் என்ற எஞ்சினுடன் இணைக்கப்படும் தொடர்வண்டிப் பெட்டி போலத் தான். தேவைக்கேற்ப அது இணைக்கப்படும்; கழற்றப்படும். உண்மையில் மதத்தில் ஒழுக்கத்திற்கு இடமேயில்லை. உலகம் பிரம்மனாலோ, ஈசுவரனாலோ படைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் ஏன் ஏற்படுகிறது? நன்மை, தீமை இரண்டுக்குமே கடவுளர்கள் பொறுப்பாளிகள் என்றால், அவர்களைவிட மோசடிக்காரர்கள் யார் இருக்க முடியும்? பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள் என்றார் புத்தர்.உலகின் எல்லா மதங்களும் அதனதன் வர்க்க நலன்களுக்கேற்ற வகையில் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன. ஆனால், ஒழுக்கம் அவைகளின் அடிப்படையல்ல. ஒழுக்கமென்பது, மதம் என்ற எஞ்சினுடன் இணைக்கப்படும் தொடர்வண்டிப் பெட்டி போலத் தான். தேவைக்கேற்ப அது இணைக்கப்படும்; கழற்றப்படும். உண்மையில் மதத்தில் ஒழுக்கத்திற்கு இடமேயில்லை. உலகம் பிரம்மனாலோ, ஈசுவரனாலோ படைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கு கவலைகளும் தொல்லைகளும் ஏன் ஏற்படுகிறது? நன்மை, தீமை இரண்டுக்குமே கடவுளர்கள் பொறுப்பாளிகள் என்றால், அவர்களைவிட மோசடிக்காரர்கள் யார் இருக்க முடியும்? பிரம்மன், ஈசுவரன் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள் என்றார் புத்தர்.
உலகின் துன்பங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணும் அயோக்கியத்தனம் என்பதைக் காட்டிலும், குருட்டு விசுவாசமென்னும் முட்டாள்தனமாகவே உள்ளது.'' புத்தர் இதை அனுமதிக்கவே இல்லை. “ஒருவருக்கு தன்னுணர்வு இருப்பின் அவர் தன்னை வெல்லட்டும்'' என்றார். ஒருவர் தனக்குத்தானே முழுமையில் தற்காப்போன் ஆவார்; வேறொரு காப்பாளர் யாருக்க முடியும்? தன்னைத் தான் தற்காக்கின்; பெறற்கய காவலை ஒருவர் பெற்றவனாகிறார் என்றார்.உலகின் துன்பங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணும் அயோக்கியத்தனம் என்பதைக் காட்டிலும், குருட்டு விசுவாசமென்னும் முட்டாள்தனமாகவே உள்ளது.'' புத்தர் இதை அனுமதிக்கவே இல்லை. “ஒருவருக்கு தன்னுணர்வு இருப்பின் அவர் தன்னை வெல்லட்டும்'' என்றார். ஒருவர் தனக்குத்தானே முழுமையில் தற்காப்போன் ஆவார்; வேறொரு காப்பாளர் யாருக்க முடியும்? தன்னைத் தான் தற்காக்கின்; பெறற்கய காவலை ஒருவர் பெற்றவனாகிறார் என்றார்.
பரிசீலனை என்பது கருத்தரித்து பத்து திங்கள் காத்திருப்பதற்கு ஒப்பானது. பிரச்சனையைத் தீர்ப்பது என்பது பிரசவ தினத்திற்கு நிகரானது. குறையற்றதென ஏதுமில்லை. இறுதியானது என ஏதுமில்லை. அனைத்தும் மறுபசீலனைக்கும், மறு சோதனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும். மறுசோதனைக்கும் அவசியம் எழும் போதெல்லாம் மறுபசீலனை அவசியம் என்றார் புத்தர்.
மக்கள் மத்தியில் நாகரீகமும் தொடங்கிய காலத்தில் மக்களை முட்டாள்களாக்கி அடிமைகளாகச் செய்யவும், தங்கள் சொந்த நலன்களைப் பெருக்கி உரிமை - உடைமை - ஆண் முதலாளிகளாகவும், சில ஏமாற்றுக்காரர்களால், மனித அவமதிப்புக்காரர்களால், உழைப்புச் சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்டதே கடவுள் ஆகும். நமது அறிவுக்கு மேற்பட்ட ஆற்றல் என்று ஒன்று இல்லவே இல்லை. நன்மைக்கும் தீமைக்கும் நமது அறியாமையே முழு முதற்காரணம். பட்டறிவு மூலம்தான் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று மொழிந்த புத்தர் உலகத்திற்குப் பாதுகாவலரோ, பேணுபவரோ என்பதாக ஒருவரும் இல்லை என்றார். உலகமென்பது இடையறாது இயங்கிக் கொண்டும், அதே சமயம் மாறிக் கொண்டும் உள்ளது. மாற்றம் என்பதே உலகத்தின் பொதுவிதி என்றும் புத்தர் அறிவித்தார்.
அறவொழுக்க ரீதியிலான சர்ச்சைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புத்தருக்கு, கடவுளின் தேவை ஏற்படவே இல்லை. கடவுளுக்கு ஒழுக்கத்தில் பங்கு இல்லை என்பதுதான் புத்தரின் முடிந்த முடிவு. இவ்வுலகில் கருணையே இல்லாமல் சில அடிதூரம் நடப்பவன், தானே தனக்குக் கோடித் துணி உடுத்திக் கொண்டு தனது சவத்தைத் தானே புதைக்கப் புறப்பட்டவன் ஆவான். ஆனால், கருணையே வடிவான புத்தர், ஒருவர் எல்லோருக்காகவும்; எல்லோரும் ஒருவருக்காகவுமான மானுட வரலாற்றில் எங்கெல்லாம் மனிதர்கள் தங்கள் ஆராய்ச்சி அறிவை இழந்திருந்தார்களோ, அங்கெல்லாம் வழிபாட்டு உணர்ச்சிக்கு அடிமையாக இருந்தார்கள். அச்சம் என்பது, மனிதர்கள் மீது ஆதிக்க மனிதர்களால் செயற்கையாக வலிந்து சுமத்தப்பட்டு ஏற்கச் செய்யும் ஓர் இழிவான செயலாகும்.
ஒழுக்க விதிகள் மனிதருக்கு நன்மை புரிபவையாகவும், அவை கடவுள் விருப்பத்தின் விளைவுகளாகவும் சொல்லப்படுகின்றன. கடவுளே உலகைப் படைத்தவர் - கடவுளே அதை ஆள்பவர் - கடவுளே பவுதீக விதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் கர்த்தா என்கிறார்கள். மனிதர்கள், அவர்களைப் படைத்த கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்தக் கீழ்ப்படிதலே ஒழுக்க நியதியை நிர்வகிக்கிறது என்கிறார்கள். ஒழுக்க விதி கடவுளிடமிருந்து தோன்றியதென்றால், கடவுளே ஒழுக்க நியதியின் தொடக்கம் என்றால், மனிதர்கள் கீழ்ப்படியாமல் தப்பிக்க முடியாதென்றால், ஏன் இந்த உலகில் ஒழுக்கச் சீரழிவு மிகுந்துள்ளது என புத்தர் வினவினார். ஒழுக்க நியதி மனிதர்களைப் பொறுத்ததேயன்றி வேறெதையும் பொறுத்ததல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதாவதொரு மனிதச் செயல்பாட்டாலோ, இயற்கை இசைவாலோ விளைவதே என்றார் அவர்.
கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த வழியும் ஏற்பதற்கு உரியதல்ல. அவை மூட நம்பிக்கையை உருவாக்குகிறது. புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் - பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர் -பூசாரி - குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி, மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பகுத்தறிவு நோக்கின், சமநோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது என்றார் புத்தார்கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்று யாராலும் நிரூபிக்க முடியாது. உலகம் பரிணமித்ததே அன்றி படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த மதமும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதேயாகும். எனவே, கடவுளை அடிப்படையாகக் கொண்ட எந்த வழியும் ஏற்பதற்கு உரியதல்ல. அவை மூட நம்பிக்கையை உருவாக்குகிறது. புத்தர், கடவுள் நம்பிக்கை என்பதை மிகவும் அபாயகரமானதாய்க் கருதினார். ஏனெனில், கடவுள் நம்பிக்கை பூசையிலும், பிரார்த்தனையிலும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பூசையிலும், பிரார்த்தனையிலும் கொண்ட நம்பிக்கை புரோகிதர் - பூசாரி நிலையைத் தோற்றுவிக்கிறது. புரோகிதர் -பூசாரி - குருமார் ஆகியோர் தீய புத்திசாலிகளாகி, மூடநம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் பகுத்தறிவு நோக்கின், சமநோக்கின் வளர்ச்சி முற்றாக அழிக்கப்படுகிறது என்றார் புத்தார்
மதத்தின் மய்யப்புள்ளி மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்கக்கூடாது என்பதே புத்தன் கருத்தாகும். மதம் என்பது, மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரும் இன்புறும் நோக்கில் ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே மதத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் புத்தர்.
“உலகம் என்பது இடை யறாது இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் உள்ளது. உலகிற்குப் பாதுகாவலோ, பேணுபவரோ ஒருவருமில்லை. நமக்குரியது ஏதுமில்லை; நமக்குப் பிறகு நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். உலகம் குறைபாடு உடையதாய், சுயநிலம் மிக்கதாய், அடிமைப்படுத்துவதாய், அவாவுற்றதாய் உள்ளது என்ற வரையறையினைத் தந்த புத்தர் என்னிடம் தங்கமோ, வெள்ளியோ வேறெந்த செல்வமோ இல்லை. ஆனால், தூய வாழ்வுக்குரிய நற்செல்வங்கள் என்னிடம் உள்ளன. தூய வாழ்வுக்குய நன்னெறி, வாழ்க்கைப் பாதையே ஆகும். மனதைப் பண்படுத்தவும், மானுட இன்பங்களின் பேரின்பமான உன்னதத்தை அடையவும், ஒருவர் தம் வாழ்வை அர்ப்பணித்து பிறர் வாழ முயல வேண்டும் என்றார் புத்தர்.
புத்தரின் முதல் நோக்கம் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவது. ஏனென்றால், பகுத்தறிவின் நீட்சியே பொதுவுரிமை - பொதுவுடைமையாகும். இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச் செல்ல மக்களைச் சுதந்திர மனிதர்களாக்குவது. அவருடைய மூன்றாவது நோக்கம், மூடநம்பிக்கையின் பலமான மூலத்தை அதாவது எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையைத் தகர்த்தெறிவது ஆகும்.
இந்த பூமியில் மானுட வாழ்க்கைச் சூழல்கள், மனிதர்களோடு பிறந்த உணர்வின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளுதல், அந்த உணர்வுகளின் உருவாக்கம், வரலாறு மற்றும் மரபுகளின் விளைவாக மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றால் மனிதர்களுக்கு விளையும் கேடுகள் ஆகியவை பற்றிய விசாரணை - ஆய்வு ஆகியவற்றால் விளைந்தது என்னும் பொருளில் புத்தரின் மார்க்கம் ஒரு புதிய கண்டுபிடிப்பேயாகும்.
பவுத்த நாத்திகத்தின் அய்ந்து முக்கியத் தத்துவங்கள்
இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் என்று சொல்லக்கூடியது ஆனது.*அனுபவங்களிலிருந்துதான் எல்லாவித அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஆகையினால், கடவுளைப் பற்றிய ஓர் எண்ணத்தையோ அல்லது கருத்தையோ அல்லது காயத்தையோ மனிதர் கொள்ளவே கூடாது.*அவயங்களின் அமைப்புகள் கற்பனை செய்யப்பட்டவை அல்ல; இயற்கையின் கோரிக்கைகளின்படி அவை வேறு துணையின்றி விருத்தியானவை.*சர்வவல்லமை உள்ளவரும், மனிதர்களின் சுகத்தில் கவலை பூண்டு எப்பொழுதும் கவனித்துக் கொண்டு வருபவருமாகிய ஒருவர் உண்டு என்னும் எண்ணத்தை, உலகத்திலிருக்கக் கூடிய துன்பங்கள் - தீமைகள் பிரத்தியேகமான உண்மைகளால் தகர்த்தெறியப்பட வேண்டும்.*இவ்வுலகத்தில் இப்பொழுது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமேதான் - அவருடைய நடத்தைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். இயற்கையாகக் காணப்படும் திடப் பொருள், அதனுள்ளிருக்கும் உயிரிகள், அதன் ஆற்றல் இவைகளினால்தான் உலகம் என்று சொல்லக்கூடியது ஆனது.*அனுபவங்களிலிருந்துதான் எல்லாவித அபிப்பிராயங்களும் தோன்றுகின்றன. ஆகையினால், கடவுளைப் பற்றிய ஓர் எண்ணத்தையோ அல்லது கருத்தையோ அல்லது காயத்தையோ மனிதர் கொள்ளவே கூடாது.*அவயங்களின் அமைப்புகள் கற்பனை செய்யப்பட்டவை அல்ல; இயற்கையின் கோரிக்கைகளின்படி அவை வேறு துணையின்றி விருத்தியானவை.*சர்வவல்லமை உள்ளவரும், மனிதர்களின் சுகத்தில் கவலை பூண்டு எப்பொழுதும் கவனித்துக் கொண்டு வருபவருமாகிய ஒருவர் உண்டு என்னும் எண்ணத்தை, உலகத்திலிருக்கக் கூடிய துன்பங்கள் - தீமைகள் பிரத்தியேகமான உண்மைகளால் தகர்த்தெறியப்பட வேண்டும்.*இவ்வுலகத்தில் இப்பொழுது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமேதான் - அவருடைய நடத்தைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
நன்றி ஏ.பி. வள்ளிநாயகம்
Posted by
சசி
at
8:38 AM
1 comments
Labels: புத்தர்
புத்தர்
புத்தர் அறிவுச் சுதந்திரத்திற்காகவும், சமூக சுதந்திரத்திற்காகவும், பொருளாதாரச் சுதந்திரத்திற்காகவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார். புத்தர் ஆண்களுக்கிடையில் மட்டும் சமத்துவம் வேண்டுமென்று கூறவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சமத்துவம் வேண்டுமென்று கூறினார். புத்தருடைய போதனைகள், மக்களுடைய சமூக வாழ்வில் ஒவ்வோர் அம்சத்தையும் உள்ளடக்கியதாயிற்று. அவருடைய கோட்பாடுகள் நவீனமானவை. புத்தருடைய முக்கிய நோக்கமானது, மனிதர்கள் இறந்த பிறகு ‘முக்தி' தருவது குறித்தல்ல; பூமியில் வாழும்போது மனிதர்களுக்கு விடுதலை என்பதாகும். சமத்துவம் என்பதுதான் பவுத்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். புத்தர் என்னுடைய பேராசான் ஆவார். - புரட்சியாளர் அம்பேத்கர்
கடவுளையும், மதத்தையும் மனிதர்கள்தான் கற்பித்தார்கள். மானுடத் தார்மீகத்தை விரட்டியடித்த ஒரு சின்னக் கும்பல் தங்களின் ஆதிக்கத்திற்காக அவ்வாறு கற்பித்தது. ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் அவர்களின் தேவையையும், ஆக்கிரமிப்பையும் நிறைவு செய்வதற்காகவே கடவுளும் மதம் திணிக்கப்பட்டன. ஆனால் மதம், கடவுளும் புகுத்தப்படாத காலம் சாக்கியர்களின் காலமாக இருந்தது. சாக்கியர்கள் தங்கள் மானுட மதிப்பீட்டை நேர்மையில் இணைத்துக் கொள்ளும் முதிர்ந்த, தேர்ந்த அறபடைப்பாளிகளாகவே விளங்கினர். சாக்கியர்கள், நிச்சயமான உயர்ந்த ஓர் அமைப்பினை நோக்கித் தங்கள் இனக்குழு செல்கிறது என்பதை உறுதி செய்தனர். சாக்கியர்களின் வரலாறு நெடுக, பொருள் முதல்வாதத்தின் பதாகையில் முன்னேற்றம் என்பது பொறிக்கப்பட்டிருந்தது.
சாக்கியர்கள் நாகரிகத்தை வளர்த்தனர். அது கலை இலக்கியத்தையும், மருத்துவத்தையும், கணிதத்தையும் வளர்த்தது. அறிவு என்பது சாக்கியர்களைப் பொறுத்தவரை, இயற்கையைப் புரிந்து கொள்வதுதான். ஆனால், கருத்து முதல்வாதிகளைப் பொறுத்தவரை அறிவு என்பது பரம்பொருளைப் புரிந்து கொள்வதே. இது இயற்கை உண்மைக்கு மாறானது; மாயையானது. உண்மையானதும் நிரந்தரமானதும் இதை உணர்தல் மட்டும்தான். சாக்கியர்களின் காலம், தத்துவத் தளிர் நடையின் அற்புதமான ஆகர்சிக்கும் தன்மை கொண்ட காலமாக இருந்தது. தத்துவம் கோட்பாடு ரீதியில் விசயங்களை ஆழமாக ஆராய்ந்து அறிவியல் கண்ணோட்டத்தில் தங்களுடைய சொந்த அறிவு நிலையை உயர்த்திக் கொண்டார்கள். சமகால வரலாற்று உணர்வு, கருத்தியல் வரலாற்றை நிர்ணயிக்கும் சக்திகளின் திசை வழி ஆகியவை பற்றிய தெளிவுடன் இயங்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.
மானுடத்திற்கு அறம் உன்னதமானது. அதன் உயரத்திற்குமேல், உயரம்கூடிய உன்னதம் மிக்க வேறெதுவுமில்லை. அறம் முன்னிலைப்படுத்தப்படுவதும், அதை தொழிற்படுத்துவதும் மனிதமாண்புகளுக்காகத்தான். சாக்கியர்களுக்கு கடந்த கால சுவாசத்திற்கும் நிகழ்கால சுவாசத்திற்கும் நிகழ்ச்சி நிரலாக அறமே இருந்தது. அவர்களின் மானுட அர்த்தம் நோக்கிய முன்னெடுப்பில் லோகாயதம், சாங்கியம் போன்றவைகளே அணிவகுத்திருந்தன. சாக்கியர்கள் தேர்வுக்குரிய தத்துவத் தகுதிகளைக் கொண்டவர்கள் என்பதால், தங்களுக்குள் மனிதாம்சத்தையே வரவேற்கும் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் மூலாம்பரத் தத்துவ மொழியின் சாயலும் தனித்தன்மையும் மேலும் வளர்ச்சி நிலைக்கு வந்து சேரும் விதத்தில் பவுத்தம் தத்துவமயமாக்கம் ஆனது.
தத்துவங்களில் முன் வரிசையில் நிற்பது பவுத்தம்தான். கிரேக்கத்தின் மிக மூத்த எபிகுரஸ் தத்துவம் தொடங்கி, உலக அளவிலான தத்துவ இயலைச் சற்று ஆழ்ந்து பார்த்தோமானால், பவுத்த தத்துவ இயல் மிகவும் ஆழமான, அகலமான, அற்புதமான தத்துவ நெறியைக் கொண்டிருப்பதை அறிய முடியும். லோகாயதம், சாங்கியம் அது சார்ந்த தத்துவ இயல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அனேகமாக பொருள் முதல்வாதம் பேசும் தத்துவங்களில்கூட, கருத்து முதல்வாதம் இலைமறைக்காயாக இருப்பது தெரியவரும். பொதுவுடைமையின் ஆசான்களான காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் மார்க்சியம் இதில் விதி விலக்கு. சாக்கியர்கள், ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு தங்கள் தத்துவ அனுபவங்களைத் தொடருதல் என்பது நிகழ்ந்தே வந்திருக்கிறது. அனுபவங்களைத் தங்கள் உடல் வெளியிலும், மன வெளியிலும் தேக்கி வைத்ததின் வீரியமே பவுத்தத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டதற்கு ஏதுவாகப் போனது. அவர்களது நிலவெளிக்கான மானுடவியலான பவுத்தம், அவர்களின் பாரம்பரியம் சார்ந்துதான் உதயமானது.தத்துவங்களில் முன் வரிசையில் நிற்பது பவுத்தம்தான். கிரேக்கத்தின் மிக மூத்த எபிகுரஸ் தத்துவம் தொடங்கி, உலக அளவிலான தத்துவ இயலைச் சற்று ஆழ்ந்து பார்த்தோமானால், பவுத்த தத்துவ இயல் மிகவும் ஆழமான, அகலமான, அற்புதமான தத்துவ நெறியைக் கொண்டிருப்பதை அறிய முடியும். லோகாயதம், சாங்கியம் அது சார்ந்த தத்துவ இயல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அனேகமாக பொருள் முதல்வாதம் பேசும் தத்துவங்களில்கூட, கருத்து முதல்வாதம் இலைமறைக்காயாக இருப்பது தெரியவரும். பொதுவுடைமையின் ஆசான்களான காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் மார்க்சியம் இதில் விதி விலக்கு. சாக்கியர்கள், ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு தங்கள் தத்துவ அனுபவங்களைத் தொடருதல் என்பது நிகழ்ந்தே வந்திருக்கிறது. அனுபவங்களைத் தங்கள் உடல் வெளியிலும், மன வெளியிலும் தேக்கி வைத்ததின் வீரியமே பவுத்தத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டதற்கு ஏதுவாகப் போனது. அவர்களது நிலவெளிக்கான மானுடவியலான பவுத்தம், அவர்களின் பாரம்பரியம் சார்ந்துதான் உதயமானது.
சாக்கிய இனக்குழு கட்டுமானத்தின் வெட்டவெளிச்சமான பவுத்தத்தின் தாயும் தந்தையுமானவர் புத்தர். மானுட வரலாற்றின் புகழ்மிக்க பக்கங்களைப் புரட்டுகின்றபோது, மகத்துவமிக்க கம்பீரத்தோடு நம்முன் புத்தர் வருகிறார். கி.மு. 6 - 5 நூற்றாண்டுகளில் கால் வைத்து வாழ்ந்தவர்தான் புத்தர். இத்துணைக்கண்டம் முழுவதும் ஆசியாவிலும் ஏன் இந்த மானுட உலகம் முழுவதும் பரவிய ஓர் இயக்கத்தின் தத்துவத்தின் தலைசிறந்த ஞானியாக விளங்கியவர் புத்தர்.
வரலாற்றில் இம்மாதியான ஓர் இயக்கம், மானுடவியலின் அடிப்படையில் வேறு எங்கும் என்றும் காணப்பட்டதில்லை. புத்தத் தத்துவம் அல்லது பவுத்தம், தொடக்க காலத்தில் உலகத்தை அணுகிய முறை சாக்கிய இனக்குழு மக்கள் அத்தத்துவ இயக்கத்திற்கு அளித்த மதிப்பு; அதன் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் இன்றைக்கு பவுத்தக் கோட்பாடுகள் என்று சொல்லப்படும் கருத்துகளை காயங்களை வைத்து மதிப்பிடவே கூடாது. பவுத்தம் என்று அர்த்தப்படு வதற்கும் ஆரம்ப காலத்தில் இருந்ததற்கும், ஒட்டும் உறவும் இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. பவுத்தத்தை பார்ப்பனியத்திற்கு வழங்குவதான நிலை, பார்ப்பன பார்ப்பனிய ஊடுருவலால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பவுத்தத் தெறிப்பு இன்னும் சாக்கிய இனக் குழுக்களின் வாரிசுகளாக வீறு பெற்றிருக்கும் தலித் மக்களிடம் தங்கியுள்ளது. தலித் மக்களின் மனங்களில் இருக்கும் படிமம் பவுத்தமே ஆகும். பவுத்தத்தை அபூர்வமான மானுட சக்தியாகவும், புதிய உயிராகவும் நிரப்பிக் கொள்ள வேண்டிய கடமையே தலித் மக்களுக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தர், இம்மண்ணின் பூர்வ குடியான சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர். சாக்கியக் குடியில் தனியுரிமை தனியுடைமை இல்லை. புத்தருடைய உள்ளத்தில் நிறைந்திருக்கும் கொள்கையும் அதுவே. புத்தர், தன் இனக்குழு சமுதாயத்தின் வழிநின்று மானிடர் அனைவரும் சமம் என்பதைக் கொண்டார். அவருடைய காலகட்டத்தில் இருந்தவர்களுக்கும் (சாக்கியர்களுக்கும்) வந்தேறியவர்களுக்குமான (பார்ப்பனர்களுக்கும்) தோன்றிய முரண்பாடுகளும் மோதல்களும் அவருடைய உள்ளத்தில் பிரதிபலித்ததின் எதிரொலிதான் பவுத்தம்.
அன்றைய சாக்கியப் பழங்குடியரசுகள் பல்வேறு கணங்களின் (குலங்களின்) தொகுப்புகளாக விளங்கின. ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு தலைவர் இருந்த போதிலும், குடியரசின் பொதுத் தலைவர் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்ந்தெடுக்கப்படுவார். கணத் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு தேர்வு செய்யப்படுவார். தவிர்க்க முடியாமல் போர் என்றால் அனைவரும் ஆயுதம் தக்கக்கூடிய நிலை இருந்ததேயொழிய, போருக்கென தனியான ராணுவ அமைப்போ, இனக்குழு நிர்வாகத்திற்கென பிரபுத்துவ தலைமையோ இல்லை. நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகள் முதலியன ‘சந்தாகாரம்' எனப்படும் பொது அவையில் விவாதித்தே முடிவெடுக்கப்பட்டது. சாக்கியப் பழங்குடியினன் இத்தகைய பொது அவை ஒன்றிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் புத்தரின் தந்தை சுத்தோதனர்.
சாக்கிய இனக்குழுச் சமுதாயம் சமத்துவம் மிக்கவையாகவும், தனியுரிமை தனியுடைமை வேட்கை அறியாததாகவும், இனக்குழு மக்களின் கருத்து ஒருமிப்பு அடிப்படையில் செயலாற்றக்கூடிய புராதனச் சமூக ஜனநாயகம் கொண்டதாகவும் விளங்கியது. சுரண்டலின் மூலமான சொத்துகளையும், அவமதிப்பின் மூலமான ஏற்றத் தாழ்வுகளையும் நிலைநிறுத்தக் கூடிய கருத்துகளும் மதிப்பீடுகளும் எதுவும் இல்லாதவையாகவும் விளங்கின. சாக்கியர்களின் இனக்குழு சமூக அமைப்பு, புராதனப் பொதுவுமை பொதுவுடைமைச் சமூகங்களாகவே விளங்கியது.
மக்களுக்கான தலைமையும், வழிமுறைகளும், வெளிப்பாட்டு முறையும் பார்ப்பனர்களுக்கும் சாக்கியர்களுக்கும் முற்றிலும் வேறுவேறானவை. பார்ப்பன மரபு தலைவர்களையும், சாக்கிய மரபு தலைவர்களையும் ஒருபோதும் பொதுமைப்படுத்திவிட முடியாது. பார்ப்பன மரபில் போரைத் தலைமையேற்று வழி நடத்திச் செல்வது அரசனின் தற்கடமையாகும். அரசன் இல்லாதவர்கள் போல் வெற்றி பெற இயலாது; எதிரிகளை (சாக்கியர்களை) வெல்ல முடியாது. பார்ப்பனிய அய்தீகத்தின்படி, ஒருவன் அரசனாக அங்கீகாரம் பெறுவதற்கு கடவுளின் இசைவு வேண்டும். எல்லாம் வல்ல கடவுளே அரசனுக்கு மூலமானவன். அரசன் மக்களுக்குச் சமமானவன் அல்ல. மக்களுக்கான கருத்தியல் அடிப்படையில் செயல்பட வேண்டிய எவ்வித நிர்பந்தம் இல்லாதவன். அரசன் என்பவன் பார்ப்பன வேத மதத்தை நிலை நிறுத்தக்கூடியவன். பார்ப்பனிய மநுதர்ம சாத்திரங்களின்படி ஆட்சி நடத்தக் கடமைப்பட்டவன்
சமத்துவம், புராதனச் சமூக ஜனநாயகம் கூடிய பொதுவுரிமை பொதுவுடைமை இனக்குழு குடியரசே சாக்கியர்களின் குடியரசு ஆகும். மக்களின் தலைவர் என்பவர் கண விரும்பி / குல விரும்பி இனக்குழுத் தோழர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்குழுவின் தலைவர் ‘ராஜா' ‘மன்னர்' என அழைக்கப்பட்டாலும், பார்ப்பனிய மரபு முடியரசுக்குரிய அதிகாரங்கள், ஆடம்பரங்கள், பரம்பரை வாரிசுரிமைகள் எதுவும் சாக்கிய மன்னருக்குக் கிடையாது. இத்தகைய மக்கள் அரசியல் மாண்பில் கரைந்த சாக்கிய இனக்குழுவிற்கு, சுழல்முறையில் தலைவர் பதவிக்கு வந்த சுத்தோதனர், மாயாதேவியைத் தன் துணைவியாக்கிக் கொண்டார். பார்ப்பனர்களின் வரையறைபோல சாக்கிய இனக்குழுக்களின் அரசு என்பது கட்டமைக்கப்படவில்லை. அரசின் தலைவர் என்பவர் கடவுளுடன் முடிச்சிப் போடக்கூடியவர் அல்லர். அவர் இனக் குழுவின் ஏகோபித்த ஒத்திசைவுடன் மக்கட்பணிக்கு அமர்த்தப்படுபவர். அவருக்கு வழிகாட்ட சாக்கிய நெறிமுறைகள் இருந்தன. இனக்குழுவின் கருத்தொருமிப்பின் அடிப்படையிலேயே செயல் முறைமைகள் மிளிர்ந்தன. தலைவனுக்கென்று தனிமரியாதையும் தனித்ததொரு வாழ்வும் வளம் சாக்கிய அரசியலில் கிடையாது. சாக்கிய இனக்குழு இயல்பு வாழ்வின் சமத்துவ அறமாண்புகளை வளர்த்தெடுப்பதே தலைவன் முதலும் கடைசியுமானப் பணியாகும்.சமத்துவம், புராதனச் சமூக ஜனநாயகம் கூடிய பொதுவுரிமை பொதுவுடைமை இனக்குழு குடியரசே சாக்கியர்களின் குடியரசு ஆகும். மக்களின் தலைவர் என்பவர் கண விரும்பி / குல விரும்பி இனக்குழுத் தோழர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்குழுவின் தலைவர் ‘ராஜா' ‘மன்னர்' என அழைக்கப்பட்டாலும், பார்ப்பனிய மரபு முடியரசுக்குரிய அதிகாரங்கள், ஆடம்பரங்கள், பரம்பரை வாரிசுரிமைகள் எதுவும் சாக்கிய மன்னருக்குக் கிடையாது. இத்தகைய மக்கள் அரசியல் மாண்பில் கரைந்த சாக்கிய இனக்குழுவிற்கு, சுழல்முறையில் தலைவர் பதவிக்கு வந்த சுத்தோதனர், மாயாதேவியைத் தன் துணைவியாக்கிக் கொண்டார். பார்ப்பனர்களின் வரையறைபோல சாக்கிய இனக்குழுக்களின் அரசு என்பது கட்டமைக்கப்படவில்லை. அரசின் தலைவர் என்பவர் கடவுளுடன் முடிச்சிப் போடக்கூடியவர் அல்லர். அவர் இனக் குழுவின் ஏகோபித்த ஒத்திசைவுடன் மக்கட்பணிக்கு அமர்த்தப்படுபவர். அவருக்கு வழிகாட்ட சாக்கிய நெறிமுறைகள் இருந்தன. இனக்குழுவின் கருத்தொருமிப்பின் அடிப்படையிலேயே செயல் முறைமைகள் மிளிர்ந்தன. தலைவனுக்கென்று தனிமரியாதையும் தனித்ததொரு வாழ்வும் வளம் சாக்கிய அரசியலில் கிடையாது. சாக்கிய இனக்குழு இயல்பு வாழ்வின் சமத்துவ அறமாண்புகளை வளர்த்தெடுப்பதே தலைவன் முதலும் கடைசியுமானப் பணியாகும்.
இத்துணைக் கண்டத்தின் வடகிழக்கு மூலையில் இருந்த தேசம் சாக்கியர் இனக்குழு தேசமாகும். விவசாய இனக்குழுக்களைக் கொண்ட இத்தேசத்தின் தலைநகரமாக விளங்கியது கபிலவஸ்து ஆகும். சாக்கிய இனக்குழுவின் முன்னோடியான கபிலரை நினைவு கூர்ந்த கபில வஸ்துவின் தலைவரும் தலைவியும் ஆன சுத்தோதனர் மாயா தேவி இணையருக்குகோதமபுத்தர், கி.. 563 ஆம் ஆண்டு வைசாக பவுர்ணமி நாளில் பிறந்தார். சித்தார்த்தன் பிறந்த நாள், அனைத்துச் சாக்கிய இனமக்களாலும் கொண்டாடப்பட்டது. சாக்கியப் பழங்குடியின் தலைநகரமான கபிலவஸ்து, ரோகிணி ஆற்றங்கரையிலிருந்த நகர மாகும். சாக்கியர்களின் கருத்துப் பரிமாற்ற கபிலபுரமாக அது விளங்கிய தால், அந்நகரில் கோதமர் பிறந்த செய்தி வட புலத்தில் சாக்கிய உலகம் முழுவதும் ஆனந்தமாய் எதிரொலித்தது.
-நன்றி ஏ.பி. வள்ளிநாயகம்
Posted by
சசி
at
7:25 AM
0
comments
Labels: புத்தர்
டாக்டர் அம்பேத்கர்
"நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''
Posted by
சசி
at
1:31 AM
1 comments
Labels: டாக்டர் அம்பேத்கர்
Tuesday, September 25, 2007
ராமர் பாலம்! என்று ஒரு பொய்
இன்று இந்துவத்துவா மதவெறி சக்திகள் ராமர் பாலம் என்று ஒரு பொய்யை சொல்லி போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
ஏன் இந்த போராட்டம்? உண்மையில் இல்லாத ஒன்றை காப்பாற்ற ஒரு போராட்டம் தேவையா? இன்னும் ஏன் இந்த பின் புத்திக்கார்களுக்கு இந்த வேலை?
பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, பார்ப்பன செயலலிதாவே'ராமன்' கட்டிய பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்கிறார். இராமகோபாலன்களும், இல.கணேசன்களும், குருமூர்த்திகளும் பூணூலை உருவிக் கொண்டு தொடை தட்டுகிறார்கள்.இராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
அடுத்து அனுமான் எரித்துப் பொசுக்கிய இலங்கை இருக்கக்கூடாது என்று போராடினாலும் வியப்பதற்கு இல்லை.
கற்பை நிருபிக்க பெண்கள் - இராமபிரான் வைத்த சோதனையைப் போல் 'எரியும் நெருப்பில் குளித்து மீள வேண்டும்' என்று கூட அடுத்தப் போராட்டத்தை இவர்கள் தொடங்கிவிடலாம்.
இந்த மதவெறி சக்திகள் பரப்பி வரும் கருத்துகளில் கடுகளவாவதுஉண்மையோ, அறிவு சார்ந்த வாதங்களோ இருக்கிறதா?
இராமாயணம் எப்போது நடந்தது? 'திரேதாயுகத்தில்' நடந்தது என்கிறார்கள். அதாவது 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு! இந்த 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - மனித இனமே உருவாகவில்லை. இரண்டு கோடி வருடங்களுக்கு முன் 'பிரை மேட்ஸ்' எனும் குரங்கினம் தோன்றியிருக்கின்றன. அவற்றிலிருந்து 20 லட்சம் வருடங்களுக்கு முன் தான் - மனிதனின் மூதாதைகள் உருவாகின. அதற்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தான் நவீன மனிதன் உலகம் முழுதும் பரவ ஆரம்பித்துள்ளான். மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியே பெறாத காலத்தில் - ராமன் வாழ்ந்தான் என்பதும் - அவன் பாலம் கட்டினான் என்பதும் கட்டுக்கதை - அல்லவா?
இன்று உலகில் தனித் தனியாக உள்ள கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றோடு ஒன்றாக இணைந்தே இருந்தன. பூகோளவியலில் இப்படி ஒன்றாக இணைந்திருந்த நிலப்பிரிவு, "பாங்கியா" என்று அழைக்கப்படுகிறது. பூமியின் வெப்பத்தினால் மாற்றங்கள் நிகழ்ந்தன. பூமியின் மய்யப் பகுதி இறுகி, அதனால் மேல் பகுதிகள் இளகி, ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிந்து பல கண்டங்களாக உருவெடுத்தன. இதை கண்டங்களின் விலகல் (கான்டினென்டல் டிரிப்ட்) என்று பூகோளவியல் கூறுகிறது. இதைப் பற்றி - பூகோளவியலிலும் நிலவியலிலும் விரிவாக கற்றுத் தரப்படுகிறது. இந்தப் பாடத்துக்குப் பெயர் 'வேகனர்ஸ் கான்டினென்டல் ட்ரிப்ட் தியரி' என்பதாகும். இப்படி ஒன்றாக இணைந்திருந்த கண்டங்கள் விலகியபோது இரு கண்டங்களை இணைத்திருந்த ஒரு நிலப்பரப்பு கடலுக்கு அடியில் போனது. புவியியலில் இதற்குப் பெயர் 'இஸ்மஸ்' என்பதாகும். இதுதான் கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டுகள். இந்த மணல் திட்டுகள் ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் சேது சமுத்திரத்திட்டம் அமையப் போகும் இடத்தில் மட்டும் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.உலகில் ஏராளமான இடங்களில் இதேபோல் மணல் திட்டுகள் கடலுக்கு அடியில் இருக்கின்றன.
தென் அமெரிக்க மற்றும் வட அமெரிக்க கண்டங்களை இணைக்கும் கடல் பகுதியில் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றன. இந்த மணல் திட்டின் மீதுதான் பனாமா கால்வாய் வெட்டப்பட்டு, கப்பல்போக்குவரத்து நடைபெறுகிறது. பசிபிக் கடலையும், அட்லாண்டிக் கடலையும் இணைப்பது பனாமா கால்வாய் தான். இந்தக் கால்வாய் அமையாமல் போயிருக்குமானால், பசிபிக் கரையோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள், தென் அமெரிக்கக் கண்டம் முழுவதையும் சுற்றி வர வேண்டியிருந்திருக்கும். அய்ரோப்பா கண்டத்தையும் - ஆப்பிரிக்கா கண்டத்தையும் இணைக்கும் கடல் பகுதியிலுள்ள மணல் திட்டு மீது தான் சூயஸ் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைப்பது சூயஸ் கால்வாய்தான். இதன் வழியாக வெற்றிகரமாக கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நியுசிலாந்து தீவுக்கு அருகிலுள்ளவை ஆக்லாந்து தீவுகள் மற்றம் கிரேட்டர் ஆக்லாந்து தீவுகள். இவைகளை இணைக்கும் கடலுக்கடியில் மணல் திட்டுகள் இருந்தன. இந்த 'மணல் திட்டு'களை வெட்டி எடுத்து - அங்கே கால்வாய் கட்டப்பட்டு, தீவுகள் இணைக்கப்பட்டுள்ளன.
கனடா நாட்டை - அதன் அருகே - நியுபவுண்ட் லான்ட் தீவுகளை இணைக்கும் கடல்பகுதியிலும், ஆஸ்திரேலியாவை - அதன் அருகே உள்ள டாஸ்மேனியா மற்றும் புரூனித் தீவுகளையும் இணைக்கும் கடலுக்கு அடியிலும் உள்ள மணல் திட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டு கால்வாய்கள் வெட்டப்பட்டு, கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது.
Posted by
சசி
at
9:52 PM
0
comments
Labels: ராமர் பாலம்
ஆனந்த விகடன்
ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி?
இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் - எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.- சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.
பக்க எண் வாரியாகக் குறிப்புகள்:
1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும்.
2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம்
3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும்.
4. இங்கு தலையங்கம் எழுத வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. இறந்த யாருக்கும் ஒரு அஞ்சலி, ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுக்குக் கண்டனம், யாருக்காவது அறிவுரை, எதற்காவது கவலை, பாராட்டு என்று வாரம் ஒன்றாக சுழற்சி முறையில் எழுதவும்.
5 - 8 . வெளியாக உள்ள புதுத் திரைப்படம் / பூசை போடப்பட்ட திரைப்படம் ஒன்றின் படங்கள், அதன் இயக்குனர் பேட்டியை வெளியிடவும்.
9. ஒரு பக்கச் சிறுகதை ஒன்று போடவும்.
10. பெண்கள் கல்லூரிப் பேட்டி ஒன்று போடவும். மாணவிகள் எல்லாம் கையைத் தூக்கியோ சைகைக் காட்டியோ எல்லாப் பல்லும் தெரிய pose தர வேண்டும். ஜீன்ஸ், சுரிதார் என்று வகைக்கு ஒன்றாக அணிந்திருக்க வேண்டும். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் - அ) sms joke ஆ) பிடித்த நடிகர் இ) என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பெண்களின் படத்தை நன்றாக எடுத்து வருமாறு நிருபரை அறிவுறுத்தி அனுப்பவும்.
11 - 13. யாராவது ஒரு அறிவுஜீவியைக் கூப்பிட்டு எதையாவது எழுதச் சொல்லவும். இவர் ஏட்டிக்குப் போட்டியாக எழுதுதல் நலம். ஒரு உலக நடப்பை ஒப்பிடுவது, பிரபலத்தைச் சிலாகிப்பது ஆகியவை அவசியம்.
14 - 16 . ஒரு நையாண்டிக் கதை. இதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம்பெறுதல் நலம்.
17. ஒரு கேலிச் சித்திரம்.
18 - 20 . கேள்வி பதில் பகுதி.இதில் வெளியிடப் பரிந்துரைக்கப்படும் கேள்விகள் - அ) முதலைக்கு மூக்கு இருக்கா? ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள்? இ) xஐயும் yஐயும் ஒப்பிடவும் ஈ) அண்மையில் பார்த்த படம், படித்த புத்தகம் என்ன?இங்கு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு பளப்பளா நடிகை படத்தை போடுங்கள். கேள்வி பதில்கள் அளவை விட படத்தின் அளவு பெரிதாக இருத்தல் நலம். தொப்புள் போன்ற பகுதிகளை சிறப்பாகக் காட்டினால் வாசகர் மகிழ்வார்.
21 - 23 . இலக்கியப் பகுதி.இங்கு பிரபல இலக்கியவாதி தான் படித்த புத்தகம், போய்ப் பார்த்த ஊர்கள், கடந்து வந்த மனிதர்கள் குறித்து எழுத வேண்டும்.
24 - 27. திரை விமர்சனம்.
36ல் இருந்து 42க்குள் ஒரு மதிப்பெண் போடவும். camera பசுமையா இருக்கு, பாட்டு இன்னும் நல்லா போட்டிருக்கலாம், hero-heroine chemistry அருமை, இயக்குனருக்கு ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா - போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்.
28 - 32 . மன ஊக்கப் பகுதி.ஒரு சாமியாரைக் கூப்பிட்டு package முறையில் தத்துவம் எழுத சொல்லவும். இவர் ஆண்டுக்கணக்கில் இதை எழுத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது நன்று.
33 - 34. முழுப்பக்க வெளியாள் விளம்பரங்கள்.
35 - 37 புதுவரவான கேரள / மும்பை நடிகைகளின் பேட்டி. விகடனை நாம் கிண்டி முடிக்கப் போகும் நேரம் வந்து விட்டதால் படம் எப்படி போட வேண்டும் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இது வரையுள்ள குறிப்புகளை இன்னொரு முறை கிண்டிப் பழகவும்.
38 - 40 ஜல்லிப் பகுதிவானம் ஏன் கீறல் விழுந்த மாதிரி தெரிகிறது, மொஹஞ்சதாரோ சிற்பங்களில் உள்ள அடவுகளை கணினிக்கு கொண்டு வர நிரல் எழுதுவது எப்படி, பழைய தமிழ் இலக்கியப் பாட்டுக்குப் பொருள் என்று கலந்து கட்டி ஜல்லி எழுத ஒரு நல்ல ஆளாகப் பிடிக்கவும்.
41 - 42 அரசியல்வாதி பேட்டிவாரம் ஒரு முறை வைத்து, தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களையும் பேட்டி எடுத்துப் போடவும். கேட்க வேண்டிய கேள்விகள் - அ) அணி மாறப் போறீங்களாமே? ஆ) உங்க வாரிசு இப்படியாமே? இ) விடுதலைப்புலி பத்தி என்ன சொல்லுறீங்க?
43 - 45 ஆன்மிகம்ஒரு கோயில் படம். பயணக் குறிப்பு, தல புராணம். மகிமை.
46 - 48 திரைப்படத் துறை ஆட்களின் தொடர்.இவர் அண்மையில் வெற்றி பெற்ற இயக்குனராகவோ சோத்துக்குத் திண்டாடும் பழைய நடிகராகவோ இருக்கலாம்.
49. வெளியாள் விளம்பரம்.
50. அட்டைப் பட விளம்பரம்.
கிண்டிய பின்:
இந்த இதழில் கூடுதலாக திரைச் செய்திகள் வந்து விட்டதால் , இதை சினிமா ஸ்பெஷல் என்று அறிவிக்கவும். எல்லா இதழ்களிலும் இதே அளவு திரைச் செய்திகள் இருக்கும். ஆனால், அவற்றை பொங்கல் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ் என்று பெயர் மாற்றிக் கொள்ளவும்.- ஜிலீர், பளீர், குற்றால குல்ஃபி, இளமை carnival போன்ற சொற்களைத் தூவி விடவும்.
பொதுவான சமையல் உத்திகள்:
ஆண்டுக்கு ஒரு முறை newsprint விலை ஏறிவிட்டது என்று புலம்பி விலையேற்றிக் கொள்ளவும். கூடுதல் பக்கங்கள் தருவதாகச் சொல்லி அவற்றில் விளம்பரம் போடவும்.- ஆறு மாதத்துக்கு ஒரு முறை விகடன் தாத்தா புதுத் தோற்றத்தில் வருவதாகச் சொல்லி அறிவிப்பு விடவும்.- தீபாவளி, பொங்கலுக்கு இரட்டைச் சிறப்பிதழ் வெளியிடுவதாகச் சொல்லி 25 பக்க அளவில் இரு புத்தகங்கள் தரவும்.- நேரம் கிடைக்கும்போது முன்பு நன்றாக இருந்த விகடன் படைப்புகளைத் தொகுத்து வைத்தால் தீபாவளி மலரை ஒப்பேற்ற உதவியாக இருக்கும்.- எத்தனைப் பக்கங்களில் விகடன் கிண்டினாலும் இந்த formulaவை மாற்ற வேண்டாம்.
Posted by
சசி
at
7:16 PM
2
comments
Labels: ஆனந்த விகடன்
விஜயகாந்த்
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த். கட்சியைப் பதிவு செய்யும் விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கே சிரிப்பு மூட்டியவர் ஆவர். "கட்சியில் ஆட்களை சேர்ப்பது என்றாலும் நீக்குவது என்றாலும் தலைவரின் முடிவு தான். கட்சியில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தலைவர்தான் எடுப்பார்'' என்று சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு போய் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்கள் தே.மு.தி.க.வினர். அரண்டு போய்விட்டார்கள் தேர்தல் ஆணையர்கள். ஜனநாயக நாட்டில் இப்படியொரு சட்டதிட்டத்துடன் கட்சியா என நொம்பலச் சிரிப்புடன் தே.மு.தி.க.வின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் தன் கட்சியில் பழைய பலாப் பழமான பண்ருட்டி ராமச்சந்திரனை அவைத்தலைவராக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அப்புறம் பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் எல்லோரையும் நியமித்திருக்கிறார். அத்தனை பேரையும் வைத்துக்கொண்டு, நான்தான் முடிவெடுப்பேன் என்று சட்டதிட்டம் வகுத்தால், அவர்களெல்லாம் எதற்கு என்ற கேள்வியை சாதாரணத் தொண்டன்கூட கேட்பான். மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களையும் 40 எம்.பி.க்களையும் மேடைக்கு மேடை கேள்வி கேட்டுச் சிரிப்பு மூட்டும் விஜயகாந்த்துக்கு, தன்னுடைய கட்சியின் சட்ட திட்டம் பற்றித் தேர்தல் ஆணையம் கேள்வி கேட்குமே என்ற அரசியல் அடிப்படை தெரியாமல் போய்விட்டது.
பாவம் விஜயகாந்த். மறுபடியும் சட்ட திட்டம் வகுத்துத் தன் கட்சியை பதிவு செய்ய வேண்டியதாயிற்று.
Posted by
சசி
at
7:10 PM
0
comments
Labels: விஜயகாந்த்
விஜயகாந்தின் மதச்சார்பின்மையும், தமிழ்பற்றும்!!
இதுநாள்வரை தாம் அல்லாவுக்காக குல்லா போடுபவர் என்றும் இஸ்லாமியர்கள் எனது ஒன்றுவிட்ட தம்பிகள் என்று சமத்துவம் சமதர்மம் பேசிய விஜய காந்து "இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்". ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று திருவாய் மலர்ந்துள்ளார். தேமுதிக என்ற தேர முடியாத திக்குமுக்கு கழக தொடக்கவிழாவில் பட்டை ( அந்த பட்டை அல்ல) நெற்றியில் அடித்துவந்து தம் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி தாம் தமிழர்களுக்காக பாடுபடப்போவதாகவும், மதசார்பற்றவர் என்றும் சொன்னார். "பட்டை" வெளிப்படையாக தெரிந்ததும் பாஜக அவரையே சுற்றி சுற்றி வந்து கூட்டணி அமைத்து சட்டமன்றத்தில் நுழைய முயற்சித்தது. விஜயகாந்தும் தமது இந்துத்துவ வேசம் வெளிப்பட்டுவிட்டால் (போட்ட) முதலும் மோசமாகி முற்றிலும் மோசமாகிவிடும் என்று தவிர்த்தார்.
எந்த கட்சியும் சரியில்லை என்று கருதிய சிலர் வேறுவழியின்றி மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதற்காக விஜயகாந்துக்கு ஓட்டுபோட்டனர், 60 விழுக்காடு பதிவான வாக்குகளில் 8% விழுக்காடு இவருக்கு கிடைத்தது. 234 தொகுதிகளில் நின்று இந்த வாக்கை பெற்றவர் வெறும் 25 தொகுதிகளில் நின்று காங்கிரசை இவருக்கு கிடைத்த 8% ஓட்டை வைத்து ஓட்டை கணக்கு போட்டு தாம் காங்கிரசை விட பெரிய கட்சி என்று சொல்லி வந்தார். அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது. விஜயகாந்துக்கு செல்வாக்கு இருப்பதாக அவரே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். மதுரை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்ததற்கு விஜயகாந்தின் ஊர் என்பதாலும், அவருடைய உறவினர்கள் என தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், ஜெயலலிதா எதிர்கட்சியாகிவிட்டதால் நம்பிக்கை இழந்ததால் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, இதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்கவே முடியாது.
இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று சொல்லி இருப்பதனால் முஸ்லிம்களின் சகோதரன் என்று சொல்லி வந்த விஜயகாந்து இதன் வழி முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் கருணாநிதி திட்டவில்லையே ஆதங்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. இவருடைய மறைமுக இந்துத்துவ முகமூடி கிழிந்து தொங்குகிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற "தமிழ் பழமொழியை" பின்வரும் தேர்தல்களில் விஜயகாந்து தெரிந்து கொள்வார்.
திருவள்ளூவர் எந்த காலேஜில் படித்தார் என்று கேட்டு தனது மேதாவித்தனத்தை தனது விசிலடிச்சான் கும்பலுக்கு காட்டி சிந்திக்க வைத்திருக்கும் புரட்சிக்கலைர்க்கு மேலும் ஒரு யோசனை ,கேள்வி கேட்பதற்கு பாரதியார் ,பாரதிதாசன் எந்த கல்லூரியில் படித்தார்கள்? அவர்கள் பெயரில் எதற்கு பல்கலைகழகங்கள்?.
Posted by
சசி
at
7:04 PM
0
comments
Labels: விஜயகாந்த்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி கையேடு
http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf
Posted by
சசி
at
6:53 PM
0
comments